Thursday, October 25, 2018

நாலக டி சில்வாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜரான சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment