Tuesday, October 23, 2018

சீஐடி யினுள் வைத்திருந்து என்னை கொல்ல முயற்சி செய்கிறார்கள். நீதிபதியிடம் றோ சந்தேக நபர்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்தியரான, மெர்சலின் தோமஸ் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கிழ், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, சீஐடியினுள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் அங்கு வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றில் கூறியுள்ளார்.

சந்தேக நபரின் முறையீட்டை செவிமடுத்த கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரட்ண அவரது முறைப்பாட்டை எழுத்துமூலம் தருமாறு வேண்டியதுடன், அவற்றை எழுதுவதற்கான கடதாசி மற்றும் பேனையை வழங்குமாறு சிறைச்சாலை உத்தியோகித்தர்களுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment