Wednesday, October 31, 2018

இனிமேல் தவறு விடமாட்டார்களாம், வரட்டாமாம் ஆட்சியமைக்க! அழைக்கிறார் சம்பிக்க.

நெகிழ்வுத் தன்மை கொண்ட தேசிய அரசாங்கமொன்றை உருவாக்க மீண்டும் ஒன்றுபடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்படி அழைப்பை விடுத்த அவர் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில், காணப்பட்ட குறைபாடுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயார் என்று கூறியுள்ளார்.

அந்தவகையில், பரந்த ஜனநாயக அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப மீண்டும் ஒன்றிணையுமாறும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறினார்.

No comments:

Post a Comment