Thursday, October 25, 2018

கொழும்பு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு விசேட அதிரடிப்படையினர் கையில்.

வெலிக்கட மற்றும் கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று (25) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வௌியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாகதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்தது.

அதன் முதல்கட்டமாக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், அதற்கு சிறைக் கைதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்ப்பில் ஈடுபட்ட அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகள் 08 பேர் நேற்று முதல் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment