Wednesday, October 24, 2018

மஹிந்தவை பிரதம மந்திரியாக்க எவ்வேளையிலும் கூட்டு எதிர்கட்சியுடன் இணைவாராம் முத்து.

மகிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாவதை தான் முழு மனதுடன் விரும்புவதாகவும் அதற்காக கூட்டு எதிர்கட்சியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து செயல்பட தயார் என்றும் துறைமுகம் மற்றும் கடல்துறைசார் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து கூறுகையில்:

அத்துடன் 2020 வரை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களே இருப்பார். அதனை எவராலும் மாற்ற முடியாது.

2015 தேர்தலில் கிடைத்த பலத்தை அநாவசிய முறையில் பயன்படுத்தி அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் செய்யும் இலஞ்சம் , ஊழல் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் பெயருக்கு அப கீர்த்தி ஏற்பட்டுள்ளது. இக் குற்றங்களை புரிந்தவர்களுக்கு முடியுமானால் பிரதமர் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களை தக்க வைப்பதற்காக பிரத்தியேக கொடுப்பனவுகள் மற்றும் வாகனங்கள் வழங்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

2020 ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களே இருப்பார். இதன்போது வெற்றிடமாக நிலவும் பிரதம கதிரைக்கு நாட்டிற்கு பொருத்தமான தலைவர் ஒருவர் தேவை. அதற்கு உகந்தவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே.

குமார வெல்கமவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவரது கருத்து முற்றிலும் உண்மையானது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் விலை சூத்திரம் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் ஒன்றாக உள்ளதாக முத்துஹெட்டிகம மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment