Friday, October 26, 2018

நான் தான் பிரதமர் - நியமனம் அரசியலமைப்புக்கு முரண் - ரணில் தெரிவிப்பு

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.

ஆயினும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளமையானது, அரசியலமைப்புக்கு முரணானது என்று, தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

ஆனால், தேசிய அரசாங்கம் என்பது 45அமைச்சர்களைக் கொண்டுள்ள அரசாங்கமாகும். அதிலிருந்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு விலக்கிக் கொண்டால் 45 அமைச்சர்களைக் கொண்டிருக்காது என்பதுடன் அமைச்சரவை தானாக கலைந்துவிடும். இதனால் பிரதம அமைச்சர் பதவிவிலகுவார். அதற்கிணங்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன புதிய பிரதமரை நியமித்துள்ளார் என சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும்அரசியமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 42(4)இன் படி புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment