Thursday, October 25, 2018

ஹக்கீம் 800 பேருக்கு தொழில் வழங்கியதாலேயே குடிநீர் பாவனைக்கான கட்டணம் அதிகரிக்க வேண்டியுள்ளது. றிசார்ட்.

குடிநீர்ப்பாவனைக்கான கட்டணத்தை 65% - 100% வரை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை கோரி பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

அமைச்சரவையில் குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள றிசார்ட் பதுயுதீன், நீர்ப்பாசனத் திணைக்களம் தற்போது நஷ்டமடைந்துள்ளதற்கான காரணம், குடிநீர் கட்டணத்தை அதிகரிக்காமை அல்லவென்றும் ரவூப் ஹக்கீம் தனது ஆதரவாளர்கள் பலருக்கு திணைக்களத்தில் வேலை வழங்கியுள்ளமையே என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்படி பணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நீர்கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள றிசார்ட் அவ்வாறு மக்கள் மீது சுமையை சுமத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

றிசார்டின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஹக்கிம், 2010 ஆண்டிலிருந்து நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாமையால், திணைக்களம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment