Monday, October 22, 2018

பொன்சேகாவின் மானத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சுயாதீன தொலைக்காட்சி. 30 இலட்சம் வழங்க உத்தரவு!

இறுதிக் கட்டப் போரின்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, வெளிநாட்டில் இருந்து கொண்டு பிரபாகரனை தாக்குதலில் இருந்து தப்ப வைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டதாக சுயாதீன தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ராஜபக்ச ஆட்சியின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையினூடாக மக்களுக்கு பிழையான தகவல்களை பிரசாரம் செய்து, தமது நாமத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக கொழும்பு கடுவெல நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் முன்னாள் இராணுவத் தளபதி.

குறித்த வழக்கினை விசாரணை செய்த கடுவல கடுவல நீதிமன்ற நீதிபதி அரவிந்த பெரேரா பொய்யான தகவலை வெளியிட்டு அவரது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக 30 இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறு சுயாதீன தொலைகாட்சி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment