Sunday, October 28, 2018

ரணிலின் பாதுகாப்பை 10 ஆக குறைக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு.

முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்கவின் பாதுகாப்பினை விலக்கி கொள்ளுமாறும் அவருக்கான பாதுகாப்பிற்கு 10 பொலிஸாரை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பிரதம மந்திரிக்கான பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்.

அக்கட்டளையில் அவர் கூறியிருப்பதாவது:

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவி நீங்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் பிரதம மந்திரியாக கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகவே முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிஉயர் பாதுபாப்பு மற்றும் மேலதிக விசேட அதிரடிப் படையை விலக்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என அவரது கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள்

ஜனாதிபதி செயலர்
பிரதம மந்திரி செயலர்
விசேட அதிரடிப்படையின் தளபதி எம்ஆர் லத்தீப் உட்பட எழுபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment