Friday, November 20, 2015

வவுனியாவில் மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை புலனாய்வுத்துறையினர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனது பிறந்த நாள் மாவீரர் தினம் எனப் பெயரிடப்பட்டு பிரமாண்டமாக வன்னி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே. புலிகள் 2009 மே மாதம் வன்னியில் மண்கவ்வியதன் பின்னர் பிரபாகரனது பிறந்தநளையல்ல இறந்தநாளைக்கூட தமிழ் மக்கள் நினைத்துப்பார்பதில்லை.

ஆனாலும் ஒரு சில விஷமிகள் தங்களது சுயலாபங்களுக்காக தொடர்ந்து சில செயற்கரிய காரியங்களை செய்தே வருகின்றனர். அவர்களை இனம்காண்பதற்காக இலங்கை புலனாய்வுத்துறை தனது கைங்கரியங்களை செய்தே வருகின்றது.

அந்தவகையில் மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுப்பதாக சுவரொட்டிகளை புலனாய்வுத்துறையினரே ஒட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment