Saturday, November 21, 2015

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் ரத்து.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதி 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபாவரையிலும் அரச அதிகாரிகளுக்கு 60 லட்சம் ரூபா வரையிலும் இந்த தீர்வையற்ற வாகன அனுமதிகள் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தன.
இதற்கு மேலதிக மஹிந்தவின் ஆட்சியின் சாதாரண இராணுவ அதிகாரிகளுக்கும் இந்த வாகன அனுமதிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் நிலையங்களில் எண்ணிக்கை 428இல் இருந்து 600 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பொலிஸ் பயிற்சி நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுஇ அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளிநாட்டுக் கணக்குகளில் இலங்கையர்கள் வைப்பு செய்துள்ள பணத்தை மீண்டும் இலங்கைக்கு எடுத்துவரும் போது அதற்கான காரணம் கோராதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டுக் கணக்குகளில் இருந்து பணத்தை இலங்கைக்குக் கொண்டுவரும் போது அதற்கான காரணம் இதுவரை கோரப்பட்டுவந்தது. எனினும், இந்த முறை இரத்துச் செய்யப்படுவதன் மூலம் வெளிநாட்டில் உள்ள பணத்தை இலங்கைக்குக் கொண்டுவர ஊக்கப்படுத்த முடியும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment