Tuesday, March 24, 2015

புலம் பெயர் தமிழர்களே . . . ஆபத்தான நோய் !!!

நோய்க்கான காரணிகள் : முதுமை, பாரிசவாதம், தலையில் அடிபடுதல், அன்பு கிடைக்காமை, உறவுகளைப் பிரிதல், குடும்பச்சச்சரவு, பயந்தான் கோழித்தனம், மாதவிடாய்க்கோளாறு, தனிமையில் இன்பங்காணுதல் . . . . . பல வேறு காரணிகளால் ஏற்படக் கூடிய இந்த நோயானது இலத்தீன் சொல்லான “Dementia” என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

சிந்திக்கும் ஆற்றலில் ஏற்படும் பாதிப்பு அல்லது அற்றுப் போதல், மொழிவெளிப்பாட்டில் ஏற்படும் இடர்பாடு, சற்றுமுன்னர் செய்த வேலையை, பழகிய நபரை, சம்பவத்தை, இடத்தை மறத்தல், உடல் அசைவியக்கத்தில் ஏற்படும் தாமதம், திக்குத்திசை தெரியாது தடுமாறுதல், மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, சரியான தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அற்றுப் போதல், ஏமாற்றியவர்களையே திரும்பவும் திரும்ப நம்புதல், தனக்கு நிகழக் கூடாததையும் கூசாமல் பிறருக்கு நிகழ்த்தல், மனஉளைச்சல், சிறுவர்-பிறர் உரிமைகளுக்கு மதிப்பறியாமை, புலன் உணர்வுகளில்(கேட்டல், பார்த்தல், சுவைத்தல், உணர்ந்தறிதல்) ஏற்படும் மாற்றங்கள், நேர்மையான சிந்தனையின்மை, தனியான வெற்றிகளில் அதிக நாட்டம், தோல்வியை ஏற்க மறுத்தல், நேர்மையற்ற கட்சிகள் - தலமைகளை இனம் காண முடியாமல் ஏற்றுக் கொள்ளலும், நிபந்தனையற்றுப் போற்றுதலும், துறை சார் திறனறியாமை(பாட்டு சிறுமி யசிக்காவுக்குப் பல கள்ள ஓட்டுப் போட்டது போன்ற செயற்பாடுகள்) , என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் என்று தெரியாமல் செயல்களை செய்தல் (கொடி பிடித்தல்) இப்படியானவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

குறிப்பு:-

இது கேலிக்காக எழுதியதல்ல . . . . . . உண்மையில் இப்டியொரு நோய் உண்டு என்பதும் உலகளாவியரீதியில் 44 மில்லியன் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருவதாகவும், இந்நோய் ஆகக்குறைந்தது 40 வயதிலும் ஏற்படலாம் என்றும், குணப்படுத்தமுடியாத நோயாகக் கருதப்படுகிறது என்றதான அனைத்துத் தகவல்களும் கனடாவிலிருந்து தளமேற்றும் பிரபல தமிழ் மின் அஞ்சல் சஞ்சிகை வானவில்லின் தகவலிலிருந்து தொகுக்கப்பட்டது! நன்றி!

இலத்தீன் மொழியில் De என்பது தேய்வடைதலையும், Mens என்பது புரிதலையும் குறிப்பிடுதலால் மொத்தத்தில் சிந்தனையாற்றல் தேய்வடைதலால் ஏற்படும் “Dementia” எனும் இந் நோய் தமிழில் 'புலன்(அறளை)பெயர்தல்' என்று அழைக்க உகந்தது.

இதன் குணங்குறிகள், பெருமளவு காரணிகள் புலம்(புலன்) பெயர்ந்துள்ள 90 வீதமான இலங்கைத் தமிழருக்கு அப்படியே அச்சொட்டாகப் பொருந்துவது காணப்பட்டதால் அலறியடித்துக்கொண்டே எனது போக்கில் இந்தத் தகவலைத் தொகுக்கத் தொடங்கினேன் . . . !

புலம் பெயர் தழிழீழ உறவுகளே நீங்களாகவே பரீட்சித்துப் பாருங்கள்! இந்த அறிகுறிகளில் ஒன்றோ பலவோ உங்களிடம் காணப்பட்டாலும். . . . . ? என் செய்வது? ஈழத் தமிழர் மரபணுவோட ஒட்டியிற்றுது... இனிக் குணப்படுத்தமுடியாது! கஸ்டமே தான்!


-லோகன்-

No comments:

Post a Comment