Sunday, February 1, 2015

ஹக்கீமின் பாதையில் சென்று கிழக்கில் ஆட்சி அமைப்போம். த.தே.கூ

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரம் அரசியல் மட்டத்தில் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் சபையின் ஆட்சியை தாம் அமைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

72 மணித்தியாலயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் அறிவித்துள்ள நிலையில் தங்களால் அது எவ்வாறு சாத்தியம் எனக்கேட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரவுப் ஹக்கீம் செல்லும் அதே பாதையில் பயணித்து அவ்விடயத்தை சாதிக்கும் என திட்டவட்டமாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment