Saturday, January 10, 2015

புதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.எம். யூ.டீ. பஸ்நாயக்கா!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.யூ.டீ. பஸ்நாயக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்போது சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பி.எம்.யு.டீ. பஸ்நாயக்க செயற்பட்டிருந்தார். அப்போது, பாதுகாப்புச் செயலாளராக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பாதுகாப்புச் செயலாளராக பி.எம்.யு.டீ. பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment