Saturday, January 10, 2015

புதிய ஜனாதிபதியின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளமைக்கு ஹட்டன் நகரசபைத் தலைவர் முறைப்பாடு!

ஹட்டன் டிக்கோயா நகர சபையில் பணிபுரியும் மூன்று ஊழியர்கள் தன்னுடைய அநுமதியின்றி புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் படத்தை நகரசபைச் சுவர்களில் ஒட்டியுள்ளதாக்க்கூறி, இன்று மாலை நகரசபைத் தலைவர் அழகமுத்து ந்ந்தகுமார் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறைப்பாட்டின்படி ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நகரசபையில் பல அரசியல்வாதிகளின் பாரிய உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தாக ஹட்டன் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

(க. கிஷாந்தன்)

No comments:

Post a Comment