Saturday, December 13, 2014

மாத்தறையில் வாக்குவசூலிப்புக்கு துணைபோகும் புலிகளின் சண்டைக்காட்சிகள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் வாக்குகளை கவர்வதற்கான இனவாதமூட்டல் வரலாற்றில் இடம்பெறாதவாறு நவீன வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆழும் கட்சியினர் சிங்கள மக்களிடம் வாக்கு கோரும்போது தாம் யுத்தத்தை வென்றவர்கள் என்ற ரீதியில் மக்கள் தமக்கே வாக்களிக்க வேண்டும் என்கின்றனர்.

எதிர்கட்சியினரோ இல்லை இல்லை யுத்தத்தை நாங்களே ஆரம்பித்து வைத்தோம், அதற்கான அத்திவாரத்தை நாமே வெட்டினோம், சர்வதேசத்தை ஒன்றிணைத்தோம், கருணாவை பிரித்தோம் என்றும் அடிக்கிகொண்டு சென்று யுத்த வெற்றிக்கு உரிமை கோருகின்றனர்.

ஆனால் ஆழும்கட்சியினரோ தாம் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டால் யுத்தத்தை முடித்து வைத்தவர்கள் என்ற ரீதியில் சர்வதேச சமூகத்தினரால் தண்டிக்கப்படும் அபாயம் உண்டு என்றும் மின்சாரக்கதிரையில் சேனாதி நாயகன் மஹிந்த ராஜபக்சவும் யுத்தத்துடன் சம்பந்தப்பட்டோரும் அமர வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இவை எவற்றுக்கும் மக்கள் செவி மடுக்க தயாராக இல்லை என்பதையும் யுத்தம் என்ற ஒன்றை மக்கள் முற்றாக மறந்துள்ளார்கள் என்பதையும் உணர்ந்துள்ள ஆழும் கட்சியினர் புலிகளின் சண்டைக்காட்சிகளை மக்களுக்கு காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

கன்ரர் ரக வாகனம் ஒன்றில் நவீன ரக தொலைக்காட்சி ஒன்றை பொருத்தி அவ்வாகனத்தை மக்கள் அதிக நடமாட்டமுள்ள இடங்களுக்கும் பிரதான நகரங்களுக்கும் கொண்டு செல்லும் ஆழும் தரப்பினர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கோர நடவடிக்கைகளையும் அதற்கு எதிராக படையினர் மேற்கொண்ட நடிவடிக்கைகளையும் காட்சிப்படுத்துகின்றனர்.

கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் மாத்தறை பஸ்நிலையம் முன்பாக யுத்தக்காட்சிகள் காட்சிப்படுத்தப்படுவதையும் மக்கள் அதனை ஏறெடுத்தும் பார்க்காமல் செல்வதையும் இங்கு காண்கின்றீர்கள்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com