Friday, July 11, 2014

தானுண்டு தன் பாடுண்டு என்று இருக்கப் போகிறார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் எவ்வித அறிக்கையும் விடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

அவ்வாறு அவர் அறிக்கை விடுவதனால் அவரது எதிர்கால அரசியல் வாழ்வுக்கு அது பங்கம் விளைவிக்கும் என அவரது ஆலோசகர்கள் குறிப்பிட்டிருப்பதே அதற்குக் காரணமாகும்.

அதற்கேற்ப, அவர் எந்தவொரு ஊடகத்திற்கும் கருத்துத் தெரிவிக்காதிருக்கும் பொருட்டு அவருடன் நெருக்கமானவர்கள் ஆவன செய்துள்ளனர்.

ஒரு மாததிற்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மீண்டும் இலங்கை வந்துள்ளதுடன், அவரது எதிர்கால அரசியல் பிரவேசத்திற்காக ஆவன செய்து கொண்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

(கேஎப்)

1 comment:

  1. Very good decition, we want always President Rajapakse only.

    ReplyDelete