Thursday, July 17, 2014

அளுத்கம - பேருவல கலவரத்தை பயன்படுத்தி இரத்தினக்கல் கடத்திய கள்வன் வலையில்!

சென்ற ஜூன் மாதம் 15 ஆம் திதகி அளுத்கம, பேருவலை பிரதேசங்களில் ஏற்பட்ட கலவர வேளையில் மாணிக்கக் கல் மற்றும் தங்க நகைக் கடைகள் இரண்டிலிருந்து ரூபா 4 கோடிக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களைத் திருடிய திருடன் ஒருவனை பெந்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளும்போது, வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 85 000 ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் பல சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment