Monday, July 21, 2014

ஞானசார தேரருக்கான அவுஸ்திரேலியாவின் விசா இரத்து ஒரு சூழ்ச்சியே!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கான விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளமையானது ஒரு பெரும் சூழ்ச்சியே என பொதுபல சேனா அமைப்பு தெரிவிக்கிறது.

அவுஸ்திரேலியாவிலுள்ள பல அமைப்புக்கள் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரரின் விசாவினை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளமையே இதற்குக் காரணமாகவுள்ளது என அவ்வமைப்பைச் சேர்ந்த டிலான் விதானகே குறிப்பிடுகிறார்.

இதனுடன் தொடர்புடைய பல ஆவணங்கள் பொதுபல சேனா வசம் இருப்பதாகவும் அவ்வமைப்புத் தெரிவிக்கின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment