Monday, July 21, 2014

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! எச்சரிக்கை....

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களின் பின்னரான காலப்பகுதியில், எல் நீனோ எனும் கடுமையான காற்றினால் இலங்கை பாதிக்கப்படலாம் என்று வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் எதிர்வரும் நாட்களில் மத்திய மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் என்று எதிர்வுகூறப்படுவதாக வளிமண்டலவியல் திணைக் களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment