Sunday, July 6, 2014

முன்னாள் ஜனாதிபதியைக் கொலை செய்ய குண்டு தயாரித்த புலிப்பினாமி கைது!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவை கொலை செய்வதற்காக குண்டு தயாரித்ததாகக் கூறப்படும் சீலன் எனும் சசீ புலி உறுப்பினர் மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த புலி உறுப்பினருடன் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கு, சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் பற்றியும், இராணுவக் கேந்திர நிலையங்கள் பற்றியும் தகவல் வழங்கிய இந்திக்க சஞ்ஜீவ எனும் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாயின் கைதுடன் புலிகளுடன் உறவு பாராட்டியதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரிகள் பலர் பற்றி தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பிடமிருந்து தெரியவருகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment