Saturday, July 26, 2014

மஹிந்தவை பேரினவாதியாக வர்ணித்தால் ரணிலை என்னவென்று சொல்வது? கேட்கிறார் இனியபாரதி

யார் வந்தாலும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே த.தே. கூட்டமைப்பின் கொள்கை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பேரினவாதி என வர் ணிக்கும் த.தே.கூட்டமைப்பு ரணிலை என்னவென்று சொல்லப் போகின்றார்கள் என்றும் யார் ஆட்சிக்கு வந்தா லும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே த.தே கூட்ட மைப்பின் கொள்கை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இனியபாரதி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இரா. சம்பந்தனுக்கு இணை யலாம் என்றால் ஏன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாஷை களை தீர்க்கக் கூடாது என வினாவியுள்ளார்.

அத்துடன் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே கூட்டமைப்பின் கொள்கை. அதனால் மாத்திரமே தமிழர்களது வாக்கை பெற்று தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இவர்களின் நம்பிக்கை. இவர்களது நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க புத்திஜீவிகளும் பொதுமக்களும் சற்று சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது. அவ்வாறு முன்கூட்டி சிந்தித்திருந்தால் இவ்வாறான கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றார்.

தன்மானமும் தனித்துவமும் உள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினர் இன்று ரணிலுடன் கூட்டிணையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்படியானால் அவர்களின் தன்மானமும் தனித்துவமும் எங்கே போனது. ஆகவே தங்களது இருப்பிற்காக தமிழர்களை பலிக்கடாவாக மாற்றும் இவர்களது அரசியல் கொள்கைக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் பொத்துவில் குண்டுமடு மகளிர் அமைப்பின் தலைவி எ.பிரதீபா ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment