Sunday, July 13, 2014

இலங்கை பெண் ஐ.நா. உயர் பதவிக்கு; தெரிவு!

சம்மித்ரி ரம்புக்வெல்ல ஐ.நா. உயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங் கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளரான சம்மித்ரி ரம்புக்வெல்ல ஐ.நா.வின் 5வது குழுவின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ஐ.நா.வின் 69வது மாநாட்டின் கூட்டத்திற்கான 5வது குழுவின் உப தலைவராக அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மித்ரி ரம்புக்வெல்ல, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 5 ஆம் குழுவில் அங்கம் வகித்து வருகிறார். ஐ.நா.வின் 69வது மாநாட்டிற்கான நிர்வாக பணிகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆலோசனைப் பணிகள் என்பவற்றை இந்த 5வது குழுவே மேற்கொண்டு வருகிறது.

1958 ஆம் ஆண்டு இலங்கை அதிகாரி ஒருவர் இந்த பதவியை வகித்து வந்ததுடன் அதற்கு பின்னர், முதல் முறையாக சம்மித்ரி ரம்புக்வெல்ல தெரிவு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment