Tuesday, July 1, 2014

மகனை சுட்டுக்கொன்ற தந்தையை தேடி பொலிஸார் வலைவிரிப்பு!

மகனை சுட்டுக்கொன்ற தந்தையை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து சண்டையிடும் 21 வயது மகனை அவரது தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவமொன்று கலவான கொஸ்வத்த பகுதியில் பதிவாகியுள்ளது.

வெடி மருந்து தூள் பயன்படுத்திய கட்டுத்துவக்கொன்றி னாலேயே இவரை தந்தை சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவத்தில் 21 வயது இளைஞன் (மகன்) உயிரிழந்ததுடன் தந்தை தலைமறைவாகியுள்ளார். கலவானை பொலிஸார் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment