Tuesday, July 8, 2014

எங்கள் தாயகத்தில் இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடு பற்றி ரமபோசாவிடம் சொல்வேன்! - சம்பந்தன்

விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இது தொடர்பில் குறிப்பிடும்போது, இன்று பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் தமிழ் தாய் நிலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற காணிகளை அபகரித்தல், மீளக் குடியேற்றப்படுதில் உள்ள தாமதம், பாராளுமன்ற தேர்வுக் குழு போன்றன தொடர்பில் பேசப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comment:

  1. ரம போசா ஒன்றும் இந்த நாட்டு ஜனாதிபதி இல்லை, ரம போசாவால ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

    ReplyDelete