Wednesday, July 9, 2014

வேலியே பயிரை மேயலாமா? 7ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியை சீரழித்த அதிபர்!

7ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இப்பாட சாலையின் அதிபரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட் படுத்தப்பட்ட சம்பவம் ஹம்பாந்தோட்டை, அன்தரவௌ கீழ்பிரிவு பிரதேசத்தில் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது

மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின்படி மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபரான அதிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி வெளளிக்கிழமை அதிபரது அறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாணவி பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதன்பின்னதாக பெற்றோர் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸில் முறைப்பாடு செய்ததை அறிந்த, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் தமது வீட்டுக்கு வந்து முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்ததாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

வைத்திய பரிசோதனைகளுக்காக மாணவி ஹம்பாந்தோட்டை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment