Tuesday, July 22, 2014

அதிவேக பாதை மூலம் அரசுக்கு 4500 கோடி ரூபா வருமானம்!

தென் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் இதுவரை 4500 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிர்மல கொத்தலாவல கூறினார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 3300 கோடி ரூபாவும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மூலம் 1200 கோடி ரூபாவும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மூலம் மாதாந்தம் 15 கோடி ரூபா வருமானம் கிடைப்பதாகவும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து இதுவரை 1200 கோடி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அது நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(கேஎப்)

No comments:

Post a Comment