Saturday, June 21, 2014

நான் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளேன்…FB தடை செய்யப்பட்டுள்ளது மனதிற்கு வேதனை தருகிறது! - ஞானசார

தாய்நாடு, சிங்கள இனம், பௌத்த மதம் பற்றி தான் பேசுவது அரசியலில் சேர வேண்டும் என்ற நப்பாசையில் அல்ல என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கிறார்.

“இவை அனைத்தையும் நான் பெரும் அபாயத்திற்கு மத்தியிலேயே நான் முன்னெடுத்துச் செல்கிறேன். பொதுபல சேனா மற்றும் எங்களது பேஸ்புக் சமூக வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது தொடர்பில் மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கின்றேன்.” எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தமது அமைப்பின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ உள்ளார் என்று குறிப்பிடும் கூற்றை நிராகரிக்கின்ற தேரர், முஸ்லிம் அரசியல்வாதிகள் திறந்ததொரு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும், அதன்மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

(கேஎப்)

No comments:

Post a Comment