Saturday, June 28, 2014

ஆசிரியைகளின் அழுத்தத்தால் மாணவி தற்கொலை: ஒருவரைச் சேவையிலிருந்து இடைநிறுத்தத் தீர்மானம் !!

கந்தான பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவ த்துடன் தொடர்புடையவரெனக் கூறப்படும் ஓர் ஆசிரி யையை சேவையிலிருந்து இடை நிறுத்த மேல் மாகாண கல்வித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.குறித்த பாடசா லையின் இரு ஆசிரியைகளின் அழுத்தம் காரண மாகவே இந்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கந்தானை ஹப்புகொடை பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 15 வயதான அபேக்ஷா செவ்மினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது தற்கொலைக்கு முன்னர் அவரால் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றிலிருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே அவரது பாடசாலை ஆசியைகள் இருவருக்கும் மாணவியின் தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment