Monday, June 30, 2014

ஞானசாரர் அமெரிக்காவினுள் உட்பிரவேசிக்க தடை விதிக்கிறது அமெரிக்கா!

அமெரிக்காவினுள் நுழைவதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஐந்துவருடத்திற்காக “விசா” தடைசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரச திணைக்களமொன்றினால் ஞானசாரரின் விசா தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் மூலம் அவரும் இத்தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

“எனது அமெரிக்க விசா தற்போது பிரச்சினையாக இருக்கிறது. அதன்மூலம் அமெரிக்காவின் ஜனநாயகம் பற்றி தெரிந்துகொள்ள முடியும். சிங்கள பௌத்தர்கள் இலங்கைக்கு பெரும்பான்மையாக இருக்கலாம். ஆனால் சர்வதேசத்திற்கு சிறுபான்மை இனம். அவ்வாறான ஒரு இனத்திற்காக குரல் கொடுக்கும் எங்களுக்கு அமெரிக்க விசா தடைசெய்யப்பட்டுள்ளது” என இதுதொடர்பில் ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment