Thursday, June 26, 2014

மட்டக்களப்பில் ஜேவிபி யின் காரியாலயம் திறப்பு.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மட்டக்களப்பு கிளை நேற்று காத்தான்குடிப்பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திசேகரன் ஆகியோர் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.



இதேநேரம் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஜேர்மனியில் தமது தோழர்கள் ஆதரவாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது கட்சியின் ஏழாவது தேசிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட „எமது தூரநோக்கு பார்வை' என்ற தமது அரசியல் முன்மொழிவுகள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment