Monday, June 30, 2014

பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு கத்திக்குத்து!

பொகவந்தலாவ பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சந்தேகத்தின் பேரில் கைது செய்த மேற்படிநபர்க்கு உணவு வழங்குவதற்காக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் சமயலறைப் பகுதிக்கு கொண்டு செல்லும் போது சமயலறைப் பகுதியில் இருந்த கத்தியை எடுத்து தன்னை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளார்.

மேற்படி நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் 30.06.2014 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கத்தி குத்துக்கு இழக்கான பொலிஸ் உத்தியோகத்தர் (சுரேஷ்) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment