Saturday, June 28, 2014

தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகிய மகள் வைத்தியசாலையில்! யாழ். மீசாலையில் சம்பவம்!

தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகிய தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

யாழ். மீசாலைப் பகுதியில் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் இடம்பெற்ற சண்டையினை நிறுத்தச் சென்ற மகளை தந்தை வாளால் வெட்டியதில் மகள் கையிலும், தலையிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (27) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment