Sunday, June 22, 2014

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ! மூன்று பெண்கள் கைது!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஹாகொல்ல எனும் பிரதேசத்தில், மாத்தறைப் பிரிவில் உள்ள பொலிஸாரால் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று பெண்களையும் குறித்த பெண்கள் தங்கியிருந்த உணவக உரிமையாளரையும் கைது செய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகம் ஒன்றை நடத்தும் போர்வையிலேயே இத்தொழிலை குறித்த உரிமையாளர் நடத்தி வந்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் திஹாகொட, செவனகல மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 25,39 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

No comments:

Post a Comment