Saturday, June 28, 2014

உரிமையாளர் அற்ற பொதியை மீட்கச்சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது வயோதிபரின் சடலம்!

புத்தளம் மன்னார் வீதியின் 4ம் கட்டைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உரிமையாளர் அற்ற பொதி ஒன்று இருப்பதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட போதே பொலிஸார் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், அத்துகிரிய மிலேனியம் சிற்றி பகுதியை சேர்ந்த 71 வயதானவர் எனவும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருவதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment