Monday, June 23, 2014

வட்டரக்க விஜித தேரர் நாடகமாடி வருகின்றார்!

வட்டரக்க விஜித தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டு ள்ளார் எனவும் அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேச ங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் திட்ட மிட்ட சதி என பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வட்டரக்க விஜித தேரர் நாடகமாடி வருகின்றார் என ஆரம் பத்திலிருந்தே பொது பல சேனா தெரிவித்து வருகின்றது. இவரைப் போன்ற மேலும் 40பேர் தொடர்பில் நாட்டு மக்கள் விரைவில் அறிந்துகொள்வர் என கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வட்டரக்க விஜித தேரருக்க பாதுகாப்பு வழங்கி, அரசாங்கம் தவறிழைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment