Friday, June 27, 2014

கணவரை கொலை செய்தாரா? அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் வைத்தியர் விளக்கமறியலில்!

அவுஸ்திரேலியாவில் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தினேந்திர அத்துகோரள என்ற வைத்தியர் கொலை தொடர்பிலேயே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதின்று 34 வயதான குறித்த வைத்தியர் காயங்களுடன் சென்டன் வீதியில் இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்தநிலையில் 34வயதான அவரது மனைவியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவரும் ஒரு வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றஞ்சாட்டப்பட்ட பெண் பிணைக்கான கோரிக்கை விடுக்கப்படாத நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment