Friday, June 27, 2014

விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!

எலஹெர பக்கமூண, வீரஹீரடிய பிரதேச விகாரையின் விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்நறுவை, அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 18, 22 மற்றும் 28 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் விகாராதிபதியிடம் சந்தேகநபர்கள் ஒரு லட்சம் ரூபா பணத்தை கோரியதாகவும் இதன்போது முரண்பாடு ஏற்பட்டதாகவும் இந்நிலையில் விகாராதிபதியை தாக்கியதாகவும் அதன்போது அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸாரது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக விகாரையின் வாகன சாரதியிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. பக்கமூண, வீரஹீரடிய பிரதேச விகாரையின் விகாராதிபதி கடந்த 21ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment