Wednesday, June 25, 2014

நாங்கள் நல்லதே நினைக்கிறோம்…. யாருக்கும் அநியாயம் செய்யவில்லை.. என்றாலும் எங்களை இம்சிக்கிறார்கள்! - ஞானசாரர்

பொதுபல சேனா அமைப்பினால் நேற்று (24) அதிஷ்டான பூசையொன்று ஸ்ரீ தலதா மாளிகையில் நடாத்தப்பட்டது.

அங்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கருத்துரைக்கும்போது, இன்று முழு இலங்கையும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்க வேளையில், அன்னிய சக்திகளிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்காக, இலங்கையை பிறநாட்டு சக்திகள் கொள்ளையிடுவதிலிருந்தும் காப்பதற்காக தாம் பங்களிப்புச் செய்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களுக்கு இவ்விடயம் பற்றி இரண்டு ஆண்டுகளாக எடுத்துச் சொல்லிவந்ததாகவும், எந்தவொரு உயிரினத்திற்கும் அநியாயம் நினைக்காமல், அகிம்சை முறையில் புத்த பெருமான் காட்டிய சீரிய வழியில் சீரிய முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் அங்கு தெரிவித்திருக்கின்றார்.

“அசத்தியத்திற்குப் பதிலாக அசத்தியத்தைத் தோற்கடித்து, சத்தியத்தை வலுப்பெறச் செய்த இத்திட்டத்தில் நாட்டின் துரதிர்ஷ்டவசமாக எங்களுடைய சிலர் எங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றார்கள். நாங்கள் பயங்கரவாதிகள் எனச் சொல்கிறார்கள். உண்மை இதுதான் எனத் தெரிந்துகொண்டும் நாங்கள் மிலேச்சத்தனம் மிக்கவர்கள் எனச் சொல்கிறார்கள். எங்களை நிர்வாணிகளாக்க் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்” எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comment:

  1. ivanga seita ADAVADU ORU NALLADAI SOLLA SOLLUNGALAN.

    ReplyDelete