Tuesday, June 24, 2014

பொது அபேட்சகருக்கான கனவினைக் களைத்தார்… நாங்கள் ரணிலாரைக் கோபிக்கிறோம்… ஜேவிபி

அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி பொது அபேட்சகர் ஒருவர் தொடர்பிலான எண்ணப்பாடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய சில செயற்பாடுகள் காரணமாக சிதைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டீ. லால்காந்த குறிப்பிடும்போது, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளமையால் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து பிரிவினரினதும் எதிர்பார்ப்புக்கள் உடைந்து சிதைந்து போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், பொது அபேட்சகரைத் தெரிவு செய்யும் காரியத்தில் ஜேவிபி தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment