Sunday, June 29, 2014

14 பெண்கள் உட்பட 28 பேரின் தாக்குதலுக்கு உள்ளானார் முணசிங்கராம விகாரையின் விகாராதிபதி!

பண்வில, ஹாத்தலே பிரதேசத்தில் உள்ள முணசிங்கராம விகாரையின் விகாராதிபதி பிரதேசவாசிகளினால் தாக்கு தலுக்கு இலக்காகியுள்ளதுடன் தாக்குதல் தொடர்பில் 14 பெண்கள், சிறுவர்கள் உட்பட 28 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் மற்றும் விகாராதிபதிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தெல்தெணிய நீததவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 27 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புட்ட 17 வயது சிறுவன் நீதவானின் அலோசனைப்படி வேரகல சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான விகாராதிபதி தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment