இலங்கைக்கு எந்த சந்தர்பத்திலும் பூரண ஆதரவு வழங்கப்படும் – இந்தோனேசியா!
போருக்கு பின்னர் இலங்கை பாரிய அபிவிருத்தியை நோக்கி நெருங்கியுள்ளதுடன் மனித உரிமைகள் துரித வளர்ச்சி கண்டுள்ளதாகவும் எனவே இலங்கையை தாம் எப்போதும் பாராட்டுவதாகவும் முடிந்த சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வர்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் திலான் பெரேரவை சந்தித்த போதே இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment