Monday, December 2, 2013

முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணியத் தடை- மொரட்டுவை பல்கலைக்கழகம் !

இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே பல்கலைக்கழக வளாகத்தினுள் இந்த தடை விதிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ஏ.கே.டபிள்யூ. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்களை மட்டும் தெரியும்படியாக முகத்தை மூடி ஆடையணிய அனுமதி கோரினர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர் பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும் முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் அணியவும் அபாயா அணியவும் எவ்வித தடையும் இல்லை. எனினும் முகத்தை மறைக்கும் விதமாக ஆடையணிவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment