Sunday, December 29, 2013

சுற்றுலா விசாவில் வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய தம்பதி கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் இருவரை நேற்று(28.12.2013)சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவரும் கணவன், மனைவி என்பதுடன் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் எந்தையூரைச் சேர்ந்த கோப்பையன் மாரியப்பன் (வயது 39), மாரியப்பன் சமணதேவி (வயது 39)என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment