Wednesday, December 4, 2013

அமைச்சரின் மகள் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த போது பல்கலைக்கழகத்தில் மயங்கி வீழ்ந்து மரணம்!

அமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மகள் நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து மரணமானார். கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் விரிவுரையா ற்றிக் கொண்டிருக்கையில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துள்ளார்.

மெய்யியல் முதுமாணிப் பட்டத்திற்கு தயாராகி வரும் இவர்,அது தொடர்பான பரீட்சைக்காக விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 35 வயதான இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார்.

No comments:

Post a Comment