Sunday, December 29, 2013

க.பொ.த (சா.த.) விடைப்பத்திர மதிப்பீடு நாளை!

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இரு கட்டங்களாக இடம்பெறும். முதற் கட்டம் நாட்டிலுள்ள 79 பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 7ம் திகதி நிறைவடையும். 2ம் கட்டம் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகும்.இது அடுத்த மாதம் 24ம் திகதி நிறைவடையும்.

நாட்டிலுள்ள 19 நிலையங்களில் 2ம் கட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இடம்பெறும். இதில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆயிரத்து 842 மதிப்பீட்டு குழுக்களும் 122 நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment