Sunday, December 15, 2013

மாணவர், சுற்றுலா விஸாவில் பிரித்தானியாவிற்குள் நுழைந்து புகலிடம் கோரும் இலங்கையர்கள் மீது கடும் நடவடிக்கை - பிரித்தானியா

மாணவர் அல்லது சுற்றுலா விஸா உக்தியை கையாண்டு அதிகளவான இலங்கையர்கள் பிரித்தானியாவிற்குள் பிர வேசித்து புகலிடம் கோரி விண்ணப்பிக்கின்றார்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

சுற்றுலா அல்லது மாணவர் விஸா அடிப்படையில் நாட் டுக்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்களே பின் னர் கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 7445 புகலிட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் புக லிடம் கோருவதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித் துள்ளது. 1951ம் ஆண்டு உலக புகலிடக் கோரிக்கையாளர் பிரகடனத்திற்கு அமைவாக பிரித்தானியா கடும் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com