Thursday, December 5, 2013

பாதுகாப்புச் செயலாளருடன் ஐ.நா சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானி சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி சாலோகா பெயனி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (05.12.2013) அவருடைய அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இலங்கை அரசின் அழைப்பின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்த கலாநிதி சாலோகா பெயனி இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்ததுடன் அப்பிரதேசங்களில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றும் குறித்து பார்வையிட்டதுடன் மீள்குடியேற்றம் குறித்தும் திருப்தியடைவதாக தெரிவித்ததாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment