Friday, December 6, 2013

தலங்கம ஓஐசி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பொலிஸ் பரிசோதகரின் கொலை தொடர்பான விசாரணையை சரிவர முன்னெடுக்காமல் இருக்க பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (05) கடுவல நீதவான் வசந்த ஜனதாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment