Tuesday, December 3, 2013

இலங்கை மீனவர்கள் அறுவர் கைது

மீனவர்கள் ஆறு பேர் ஆந்திர பிரதேச கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திரபிரதேச கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கையைச் சேர்ந்த மீன்பிடிப் படகு, இந்தியக் கடல் எல்லைக்குள் பயணிப்பதை அவதானித்துள்ளனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப் படகில் இருந்தவர்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடற்படையினர் அவர்களைப் கைது செய்து துறைமுகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டில்லன் (24),சுமித் (32), சுரைத் (25), சஞ்சய்யா (25) ரண்டிகா (26), ஜீவன் (26) ஆகிய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment